தண்டவாளத்தின் நடுவே மரக்கட்டை - பயணிகளின் நிலை என்ன?
wood logs on track in uttar pradesh
நாடு முழுவதும் ரெயிலை கவிழ்ப்பதற்கான சதி வேலைகள் அதிகரித்து வருகின்றன. அதாவது, ரெயில்வே தண்டவாளங்களில் கம்பிகளை வைப்பது, கேஸ் சிலிண்டர்களை வைப்பது என்று மர்ம நபர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் ஒரு ரெயில் கவிழ்ப்பு சதி அரங்கேறியுள்ளது. அதாவது டெல்லி லக்னோ இடையே ஓடும் பரைலி - வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் செல்லும்போது அங்கே போடப்பட்ட மரக்கட்டைகள் மீது இடித்து சில தூரத்துக்கு இழுத்துக்கொண்டு சென்றுள்ளது.
இதையறிந்த ரெயில் ஓட்டுநர் நிலைமையை சமாளித்துக்கொண்டு பாதுகாப்பாக ரெயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், அந்த தடத்தில் செல்லும் மற்ற ரெயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் மரக்கட்டையை அங்கிருந்து அகற்றினர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
wood logs on track in uttar pradesh