சென்னையில் பயங்கர அதிர்ச்சி!...பெண் காவலர் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் ஆயுதப்படை பெண் காவலரின் துப்பாக்கி திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி வளாகத்தில் இன்று காலை வங்கியின் உள்ளே திடீரென எச்சரிக்கை அலாரம் அடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பணியில் இருந்த  ஆயுதப்படை பெண் காவலர் தர்ஷினி என்பவர், உடனடியாக பாதுகாப்பிற்காக வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி உள்ளார்.

தொடர்ந்து வங்கி வளாகத்தை சோதனை செய்த காவலர் தர்ஷினி,  வங்கியை சுற்றி யாரும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். இதையடுத்து துப்பாக்கியில் இருந்த தோட்டாவை எடுக்க அவர் முயன்ற போது, எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் துப்பாக்கியில் இருந்த தோட்டா சுவரில் பாய்ந்துள்ளது. இதில் நல்வாய்ப்பாக ஆயுதப்படை பெண் காவலர் தர்ஷினி உயிர் தப்பிய நிலையில், இதில் யாருக்கும் எந்தவித  பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.  தற்போது இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terrible shock in chennai the female guard gun suddenly exploded causing excitement


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->