பையில் கிடந்த இளம்பெண் சடலம்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


டெல்லி, சதாரா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் விஸ்வாஸ் நகர் பகுதியில் ஒரு வீட்டின் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் பை ஒன்று கிடைப்பதாக தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு இருந்த பையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் சடலம் திணிக்கப்பட்டிருந்தது.

பின்னர் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்த பெண்ணின் பெயர் ஷாமா (வயது 23) என்பதும் இவர் நியூ சஞ்சய் அமர்காலணியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தபோது அந்த பெண் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் கொலை செய்து பையில் அடைத்து தூக்கி வீசியது கண்டறியபட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. 

இதுவரை நடந்த விசாரணையில் சந்தேகமான நபரை குறித்து வலுவான தலையங்கம் கிடைத்துள்ளது. குற்றவாளியை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young girl body lying bag Shocking information  in the investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->