நாகை || பேசாமல் சென்ற காதலி.! ஆத்திரத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


நாகை || பேசாமல் சென்ற காதலி.! ஆத்திரத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகலை அடுத்த தேப்பிராமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இவர் மருங்கூர் சத்திரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயஸ்ரீயின் பெற்றோர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு அவரிடம் தெரிவித்துள்ளனர். அதன் படி ஜெயஸ்ரீ, மணிகண்டனுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

இதனால், ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஜெயஸ்ரீயை சந்தித்து தனியாக பேச வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளார். உடனே ஜெயஸ்ரீ மணிகண்டனுடன் சென்றுள்ளார். அங்கு மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கீழே விழுந்து கிடந்த ஜெயஸ்ரீயை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயஸ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

youth arrested for tried kill girl friend in nagapatinam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->