ஜாபர் சாதிக் உட்பட 5 பேரில் நீதிமன்ற காவல் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரில் நீதிமன்ற காவல் வருகின்ற 29ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரூ. 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், அசோக்குமார். முகேஷ் உள்பட 5 பேரை கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் கைது செய்தனர். 

இந்நிலையில் ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரில் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்ததால் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தப்பட்டனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவல் வருகின்ற 29ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 

மேலும் 5 பேரிடமும் திகார் சிறைக்கு சென்று வாக்குமூலம் பெற அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்கனவே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Zafar Sadiq including 5 people custody Extension 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->