தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு - அதிரடி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான வழக்கை அடுத்த மாதம் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து, புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவில் பல்கலை மானிய குழுவின் உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என்று ஆளுநர் ரவி அறிவுறுத்தியிருந்தார். 

இது விதிமுறைகளுக்கு எதிரானது என கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. ஆனால், இந்த மனு மீதான விசாரணை நடைபெறாததால் இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் இறுதி விசாரணை நடக்கும் என்று அறிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

supreme court order tn governor case postpond coming feb 4


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->