பெங்காலி ஸ்பெஷல் ஸ்வீட்.. ரசமலாய் சாப்பிட்டு இருக்கிறீர்களா.. உடனே செஞ்சி பாருங்க..!
Rasamalay Recipe Tamil
பெங்காலி இனிப்பான ரசமலாய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. கடைகளில் வாங்காமல் ரசமலாயை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்போம்.
தேவையாவனை:
பால் - 3 லிட்டர்
சர்க்கரை - 3 கப்
தண்ணீர் - 4 கப்
குங்குமப் பூ - சிறிது
ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
பாதாம், முந்திரி, பிஸ்தா - 3 டேபிஸ் ஸ்பூன்
செய்முறை:
ஒரு லிட்டர் பாலை அரை லிட்டராக கொதிக்க வைத்து கொள்ளவும். அந்த பாலில் 1 கப் சர்க்கரை, குங்குமப் பூ, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க விட வேண்டும். அது கரைந்ததும் அடுப்பை அணைத்து வைத்து கொள்ள வேண்டும்.
மீதமுள்ள 3 லிட்டர் பாலை கொதிக்க வைத்து எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். திரிந்த பாலை காட்டன் துணியில் மூட்டை கட்டி தண்ணீர் வடியும் படி வைக்க வேண்டும். தண்ணீர் வடிந்து அதனை மென்மையாக பிசைந்து கொள்ளவும்.
அந்த மாவை சிறிது வடை போல தட்டி அடிகனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் மீதியுள்ள 2 கப் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
தட்டி வைத்திருக்கும் வடையை சக்கரை பாகில் சேர்க்க வேண்டும். அந்த வடைகள் உப்பி வந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் பாலில் சேர்த்து குளிச்சியாகவோ அல்லது சூடாகவோ பரிமாறலாம்.