சற்றுமுன் அதிமுக முன்னாள் அமைச்சர் அதிரடி கைது! நடுரோட்டில் சம்பவம்.. விழுப்புரத்தில் பரபரப்பு!  - Seithipunal
Seithipunal


விசிக நடத்திய மதுஒழிப்பு மாநாட்டில் தான் பங்கேற்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, விழுப்புரத்தில் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தர்ணா போராட்டம் நடத்தியாதல் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "திமுக ஆட்சிக்கு வந்த இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தொலைபேசி மூலமாக எனக்கு என் மீது பல்வேறு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் ஆபாசமாக பேசுதல்கள் குறித்து, விழுப்புரத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளேன்.
 
மேலும் whatsapp மூலம் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இப்படியான புகார்கள் கொடுத்து இரண்டு ஆண்டுகளும் ஆகிவிட்டன. 

என் வீடு புகுந்து உன்னை கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தவரின் முகவரி உட்பட இணைத்து புகார் அளித்துள்ளேன். 

ஆனால், இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அந்த நபரை கூப்பிட்டு காவல்துறையே மன்னித்து அனுப்பி இருக்கிறார்கள். இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது.

அண்மையில் கூட என் வீட்டுக்குள் நுழைந்து ஒருவர் வீடியோ எடுக்கிறார். அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தால், இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் என்னுடைய லெட்டர் பேடை தவறாக பயன்படுத்தியது தொடர்பாகவும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். இப்படி 20 புகார்களை நான் கொடுத்தும் எந்தவித விசாரணையும் நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, போராட்டத்தை கைவிட மறுத்ததால் சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK CV Shanmugam Arrested in Vilupuram


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->