அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு எப்போது? சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக பிரிந்தனர். 

இதனையடுத்து கடந்த மாதம் 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், சுமார் 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், அதிமுகவின் இந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு அதிமுக எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடரும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி கே பழனிசாமி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார். 

இந்த வழக்கின் இறுதி விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "அதிமுகவில் பொதுக்குழுவே அதிகாரம் படைத்தது. அப்படிப்பட்ட பொதுக்குழுவின் உறுப்பினர்களின் அதிகபட்ச ஆதரவுடன் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தனி நீதிபதியின் உத்தரவு காரணமாக தற்போது அதிமுக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது" என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

ஓ பன்னீர்செல்வம் தரப்பில், "அதிமுக என்ற பேரியக்கத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் மட்டுமே நிர்வாகிகளை தேர்வு செய்ய முடியாது. இது கட்சி விதிகளுக்கு அப்பாற்பட்டது" என்று வாதம் வைக்கப்பட்டது.

இருதரப்பின் இறுதி வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வாக்கின் தீர்ப்பு வருகின்ற செவ்வாய்க்கிழமை (30ஆம் தேதி) அல்லது செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி (வியாழக்கிழமை) வெளியாகலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK General Commute Meet eps case judgement date info


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->