BigBreaking | ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு - உச்சநீதிமன்ற தலைமை அமர்வு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி, ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, கடந்த மாதம் 15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி உத்தரவிட்டார்.

மேலும், எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்றுகொண்டு, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை அவரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து, கடந்த 4 ஆம் தேதி அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து, ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி இடம் ஒப்படைத்த விவகாரத்தில், இடைக்கால தடை விதிக்க முடியாது என்று, ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK head office case SC Order OPS vs EPS


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->