கொள்ளையடிப்பதும் - கொள்ளை அடித்த பணத்தை வைத்து கொண்டாடுவதிலும் தான் திமுக அரசு குறியாக இருக்கிறதா? - ஜெயக்குமார்!
ADMK Jayakumar Condemn to DMK Govt BJP Govt
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தாவது, " பள்ளி கல்வித்துறையின் நிதியை விடுவிக்க தேசிய கல்விக் கொள்கையின் கீழ் இணைய நிர்ப்பந்தம் செய்வதை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களும்-தமிழ் மண்ணும் மும்மொழிக் கொள்கையை எந்நாளும் ஏற்க போவதில்லை!
தேசிய கல்விக் கொள்கையின் அங்கமாக உள்ள பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைய 'மிகவும் ஆர்வமாக'(Very Keen) உள்ளதாக தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது ஏன்?
தற்போது அமைச்சரே ஒப்பந்தம் போடப்பட்டதை ஒப்பு கொண்டுள்ள காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது!
PMShri-க்கு ஒப்புதல்!
NEP-க்கு எதிர்ப்பு!
இரண்டின் நோக்கமும் ஒன்றுதான் என அமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? பாஜக அரசு நிதியை விடுவிக்காமல் விளையாட்டு காட்டுகிறது!
இங்குள்ள அரசும் அதை பற்றி கவலைப்படாமல் உதயநிதி பிறந்த நாள் கிரிக்கெட் விளையாட்டில் மும்முரமாக இருக்கிறது!
கொள்ளையடிப்பதும் - கொள்ளை அடித்த பணத்தை வைத்து கொண்டாடுவதிலும் தான் திமுக அரசு குறியாக இருக்கிறதா?
நிதி பற்றாக்குறையால் பள்ளிக்கல்வித்துறை பதாளத்திற்கு செல்வதில் இரண்டு அரசுகளுக்கும் இணையான பங்கு உள்ளது!
பாஜக அரசு நிதியை விடுவித்து மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும்! திமுக அரசு இரட்டை வேடங்களை கலைத்து விட்டு-உரிமை விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
Unfit அமைச்சர்களாலும்-பொம்மை முதலமைச்சராலும் அல்லல் படுவது தமிழ்நாட்டு மக்கள் தான்... இருமொழிக் கொள்கையை மட்டுமே ஏற்போம்! தமிழ்மொழி காப்போம்! என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
English Summary
ADMK Jayakumar Condemn to DMK Govt BJP Govt