அதிமுக பொது குழு வழக்கு :: நேற்று இபிஎஸ் தரப்பு.. இன்று ஓபிஎஸ் தரப்பு.. 2வது நாள் விசாரணை தொடங்கியது..!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் இபிஎஸ் தரப்பினர் முதலில் தங்களது வாதங்களை முன்வைத்தனர். குறிப்பாக ஓபிஎஸ் திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதித்தனை உண்டாக்கியது.

மேலும் இபிஎஸ் தரப்பினருக்கு எதிராக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை அடுக்கினர். இதற்கு பதில் அளிக்க முடியாமல் இபிஎஸ் தரப்பினர் திணறினர். இந்த நிலையில் இன்று தொடங்கிய இரண்டாவது நாள் விசாரணையில் ஓபிஎஸ் தரப்பினர் முதலில் வாதத்தினை தொடங்கியுள்ளனர். இன்றுடன் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இபிஎஸ் தரப்பின் எதிர் வாதத்தை கேட்ட பின்பு இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK General committee case 2nd day hearing started


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->