சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுங்க - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Anna University Harassment case TN Police Madras High Court
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை ஒழுக்கக் கேடாக FIR பதிவு செய்து உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தாமே முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
பெண் அதிகாரிகளை கொண்ட SIT அமைக்க வேண்டும்
FIR Leak ஆன விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் இலவச கல்வி வழங்க வேண்டும்
பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது தவறு.
முதல் தகவல் அறிக்கையில் கண்ணியத்துடன் தகவல்களை பதிவிட வேண்டும்.
முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செய்தியாளர் சந்திப்புக்கு ஆணையர் தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை என்பது உறுதியாகி உள்ளதால், அவர் மீது தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
English Summary
Anna University Harassment case TN Police Madras High Court