எழுச்சி.. இது அறிவு கெட்ட... எழுச்சி! ஆபத்தை ஏற்படுத்தி எழுச்சி - அறப்போர் இயக்கம் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சென்னை ECR பாலவாக்கம் சாலை நடைபாதையை ஆக்கிரமித்து, சாலை ஓரத்தில் விசிக-வை சேர்ந்த சிலர் பேனர் வைத்து உள்ளனர்.

இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எழுச்சி..எழுச்சி... இது அறிவு கெட்ட பேனர்களின் எழுச்சி. 

அறிவு கெட்டவர்கள் தங்கள் முகத்தை விளம்பரப்படுத்த சாலையில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி எழுச்சி. 

அடுத்த கட்சி பேனர் வைத்தால் கண்டிப்பதும் தங்கள் கட்சி பேனர் வைத்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதும் தான் தமிழக அரசியல் கள்ள கலாச்சாரம். 

சென்னை காவல்துறை, சென்னை போக்குவரத்து காவல்துறை நீங்க தூங்குங்க சார்" என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக நேற்று அறப்போர் இயக்கம் தனது சமூக வலைதள பக்கத்தில் திமுகவினர் சாலை ஓரங்களில் திமுகவின் கொடி கம்பம் நட்டு வைத்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அதில், "சாலைக்கு நடுவில் ஆபத்தான கொடி கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்களை இவர்கள் வைத்து விட்டு, விபத்து நேரிட்டால் மக்களுக்கு அறிவில்லையா என்று கேட்பார்கள். 

விழா நடத்தனும். விளம்பரம் தேடனும். மக்கள் நசுங்கினாலும் பிதுங்கினாலும் அதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாத அறிவு கெட்ட ஆட்சியாளர்கள்" என்று கடுமையாக தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor iyakkam condemn to VCK Thirumavalavan DMK Govt


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->