மேலும் மூன்று பேர் கைது! ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் அடுத்தடுத்து நடக்கும் திருப்பம்! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒரு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இந்த வழக்கை விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் தற்போது வரை 24 பேரை கைது கைது செய்துள்ள நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அதன்படி, ரமேஷ், கோபி, குமரன் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், இந்த வழக்கில் கடந்த 20 நாட்களாக தேடப்பட்டு வரும் குற்றம் ரவுடி செந்திலின் கூட்டாளிகள் தான் தற்போது கைது செய்யப்பட்டவர்கள் இவர்கள் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், இவர்களில் ராஜேஷ் என்பவர் வெடிகுண்டுகளை வாங்கிக் கொடுத்ததாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் மற்றும் அஸ்வத்தாமனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் விசிக பிரமுகரிடம் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong BSP Case 3 more arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->