இரு மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை! அது நம்ம நோக்கி வருது! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தற்காலிகமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மத்தியவங்க கடல்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லாமல் இருப்பது உறுதிப்படுத்த வேண்டுமென மீன்வளத்துறை வலியுறுத்தியுள்ளது.  

இந்த பருவநிலை மாற்றங்கள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை சிக்கலாக்கும் அபாயம் கொண்டதாக இருக்கிறது. எனவே, மீனவர்கள் நிலைமை சீராகும் வரை கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

மேலும் தகவல்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pudukkottai Ramanathapuram district fisherman warning


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->