நாகையில் பெரும் பரபரப்பு!...தவெக-வை திணற வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு!....மருத்துவமனையில் 3 பேர் அனுமதி!...என்ன நடந்தது?
Big commotion in the nagai marxist communist who strangled tvk 3 people admitted to the hospital what happened
தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி தனது கட்சியின் முதல் மாநாட்டை நிகழ்த்த உள்ள நிலையில், இதற்கான பணிகளில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர், பெருங்கடம்பனூர், ஓர்குடி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் பெருங்கடம்பனூர் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் அருகே தமிழக வெற்றிக்கழகத்தினர், கொடிக்கம்பம் நடுவதற்கு வந்தனர்..
அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கொடிக்கம்பம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதில் இரண்டு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இதில் மாரிமுத்து, இளங்கோ, துரை ஆகிய 3 பேர் காயமடைந்ததை அடுத்து, இவர்கள் ஒரத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கீழ்வேளூர் போலீசார் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக வெற்றிக்கழக கொடியினை வேறு இடத்தில் ஏற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Big commotion in the nagai marxist communist who strangled tvk 3 people admitted to the hospital what happened