ஐ.நா அமைப்பால் எந்த உபயோகமும் இல்லை!...மத்தியமைச்சர் ஜெய்சங்கர் காட்டம்1
UN organization is of no use union minister jaishankar kattam
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கவுடில்ய பொருளாதார மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்ட நிலையில், அவரிடம் மாறிவரும் உலகளாவிய சூழ்நிலையில், ஐ.நா. அமைப்பின் பங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர், ஐ.நா. அமைப்பு ஒரு பழைய நிறுவனம் போன்று உள்ளதாகவும், நடப்பு நிலைமைக்கு ஏற்றார் போல் இல்லாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் ஐ.நாவின் செயல்பாட்டில் சிறந்த ஒன்றாக இல்லை என்று குறிப்பிட்ட அவர், முக்கிய விவகாரங்களில் எந்தவித நடவடிக்கையும் அந்த அமைப்பு எடுக்காததால், நாடுகள் தங்களுடைய சொந்த முயற்சிகளை மேற்கொண்டு தீர்வு காண்பதாக தெரிவித்தார்.
இன்று உலகில் 2 தீவிர மோதல்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஐ.நா பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு பார்வையாளர் போன்று செயல்படுவதாக கடுமையாக சாடினார்.
மேலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், தேவையானவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல், உள்ளிட்ட பணிகளை ஐ.நா மேற்கொண்டு வருகிறோம் என்று வலைதளத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும், காலமாற்றத்திற்கு ஏற்ப, ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சாடியுள்ளார்
English Summary
UN organization is of no use union minister jaishankar kattam