மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி?..வெளியானது தகவல்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில்,  20-ம் தேதி பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, பாஜக காங்கிரஸ் இடையே தற்போது இழுபறி நீடித்து வருகிறது.  அதன் படி, பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் சம பலத்துடன் 10 தொகுதிகள் வித்தியாசத்தில் இருந்தது.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145. இந்த சூழலில்,  200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாக்குப்பதிவு எண்ணப்படுவதால் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bjp rule again in maharashtra released information


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->