BREAKING : மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இழுபறி! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு  ஒரே கட்டமாக இந்த மாதம் 20-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்த நிலையில்,  20-ம் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடிகளில் இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பாஜக காங்கிரஸ் இடையே தற்போது இழுபறி நீடித்து வருகிறது.  அதன் படி, பாஜக கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் சம பலத்துடன் 10 தொகுதிகள் வித்தியாசத்தில் உள்ளது.

அவை பின்வருமாறு : பாஜக - 134
காங்கிரஸ் - 126

வாக்குப்பதிவு எண்ணப்படுவதால் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணிக்கும், காங்கிரஸ், சிவ சேனா (உத்தவ் தாக்கரே), தேசிய வாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Breaking aharashtra assembly elections drag on


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->