சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: நாம் தமிழர் கட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நம் அண்டை மாநிலமான தெலங்கானாவில், கர்நாடகாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்து உள்ளனர்.

ஏற்கனவே பீகார் மாநிலத்தில்  சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன்படி இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேபோல் தெலுங்கானா மாநிலத்தின் இட ஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காட்டில் இருந்து 66 விழுக்காடாக உயர்த்த முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்த முன்வரைவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற உள்ளனர்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒரு கிராம பஞ்சாயத்து தலைவருக்கு கூட அதிகாரம் உள்ளது. ஆனால், மத்திய அரசுத்த தான் எடுக்க வேண்டும், தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடர்ந்து நாடகம் நடத்தி வருவதாக பாமக குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பா.ம.க. அணைத்து கட்சியை கூட்டி சென்னையில் போராட்டம் நடத்தி தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துமாறு தமிழக அரசை வலியுறுத்தி 16-ந்தேதி செங்கல்பட்டில் பேரணி நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் செங்கல்பட்டில் பிற்பகல் 4 மணிக்கு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் வெளியான அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste Census naam tamilar katchi Seeman 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->