சாதிவாரி கணக்கெடுப்பு: எந்த முயற்சியும் எடுக்காத தமிழக அரசு! பாராளுமன்றத்தில் அம்பலமான உண்மை! - Seithipunal
Seithipunal


சாதிவாரி கணக்கெடுப்பு சம்பந்தமாக எந்த ஒரு முயற்சியும் தமிழக அரசு எடுக்காமல் இருந்தது அம்பலமாகியுள்ளது.

இன்று பாராளுமன்றத்தில் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்வி மூலம் இது வெளிவந்துள்ளது.

சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அன்புமணி இராமதாஸ் எழுப்பிய கேள்வி:

2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரத் தொகுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு சாதி கணக்கெடுப்பு நடத்துவதற்காக, பல்வேறு சமூகங்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை நிரூபிக்க தேவையான சமகால தகவல்களைச் சேகரிப்பதில், அரசுக்கு ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா?  

உள்ளதெனில், அதற்கான விவரங்கள் என்ன? மேற்கண்ட விடயத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் மத்திய அரசுக்கு ஏதேனும் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளதா? அளிக்கப்பட்டிருந்தால், அதற்கான விவரங்கள் என்ன?  

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை மாநில அமைச்சர் கொடுத்த பதில்:

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறைக்கு, தமிழ்நாடு அரசு சாதி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Caste Census PMK Anbumani DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->