விமான நிலையத்தில் வைத்தே முதல்வரை சந்தித்த செந்தில்பாலாஜி! - Seithipunal
Seithipunal


அரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.

முதலமைச்சரை வரவேற்பதற்காக மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் வருகை தந்தனர்.

விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை செந்தில் பாலாஜி சந்தித்தது அவரிடம் வாழ்த்து பெற்றார்.

முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து இருந்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது,

"பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக, அண்ணன் செந்தில் பாலாஜி அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்" என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Airport DMK CM MKStalin meet SenthilBalaji


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->