அதிமுகவை அடுத்து பாஜக எடுத்த அதிரடி முடிவு - விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை, மாணவி விவகாரம்! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் மையப் பகுதிகள் வைத்து மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலயை ஏற்படுத்தியுள்ளது. 

ஏற்கனவே திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக, பாமக என அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து வரும் நிலையில், இந்த வழக்கை தாமே முன்வந்து விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், மூன்று பெண் உயர் அதிகாரிகள் தலைமையில் வழக்கை விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்ததுடன், தமிழக காவல்துறைக்கும், அரசுக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யலாம் என்று தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதிமுக தரப்பில் சென்னை உச்சநீதிமன்றத்தில் ஒரு கேவெட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதில் இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்களது தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில், பாஜக தரப்பிலும் இந்த வழக்கில் ஒரு கேவியட் மனு தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Anna University issue ADMK BJP DMK government supreme court supreme court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->