கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : சசிகலா, எடப்பாடி கே பழனிச்சாமியை இணைக்கக் கோரிய வழக்கு., சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.! - Seithipunal
Seithipunal


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணை  நடந்து வருவதால், சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சசிகலா, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி உள்ளிட்டோரை இணைக்கக் கோரி, குற்றம்சாட்டப்பட்ட தீபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும் நிலையில், நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி தீபு கூடுதல் மனு ஒன்றினை தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, "மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும்" என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணை நடந்து வருவதால், சாட்சி விசாரணையை நடத்தும்படி உத்தரவிட முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CHENNAI HC KODANADU CASE EPS


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->