14 கிலோ தங்கம்: கடத்தல் வழக்கில் பிரபல தமிழ் நடிகை கைது – திரையுலகில் அதிர்ச்சி!
Tamil actress arrest for Gold Smuggling
2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வாகா படத்தில் கதாநாயகியாக நடித்த கன்னட நடிகை ரன்யா ராவ் (31) தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ளார். பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 14.8 கிலோ தங்கத்துடன் அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு துபாயில் இருந்து பெங்களூருவிற்கு வந்த அவர், உடலில் அதிக நகைகள் அணிந்திருந்ததை கவனித்த வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI) அதிகாரிகள் சந்தேகத்துடன் விசாரணை மேற்கொண்டனர். அவரது உடைமைகளை சோதனை செய்ததில், தங்கக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தங்கக் கடத்தலின் பின்னணி
🔹 கடந்த 15 நாட்களில் நான்கு முறை துபாய் சென்று வந்திருந்தார்.
🔹 அதிகாரிகள் முன்னதாகவே கண்காணித்து வந்ததால், இந்த முறை விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரத்துக்கு முன்பே காத்திருந்து அவர் வந்தவுடன் சோதனை நடத்தினர்.
🔹 அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கம் மற்றும் நகைகளை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔹 மொத்தம் 14.80 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நடிகை ரன்யா ராவை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் இன்னும் பலர் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், ரன்யா ராவின் தந்தை கர்நாடகாவில் உயர் பதவியிலுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி (ADGP) என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil actress arrest for Gold Smuggling