முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contact-இல் இருக்கிறார்; அண்ணாமலை பதிலடி..!
Chief Minister Stalin is out of touch with the people of Tamil Nadu Annamalai
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் நடந்த அரசு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், தமிழகம் எப்போதுமே டில்லிக்கு, 'அவுட் ஆப் கன்ட்ரோல்'தான். என்று குறிப்பிட்டார்.
மேலும், இங்கே இருக்கக் கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்து கொண்டால், நீங்கள் ஜெயிக்க முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளதாவது; முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களிடமிருந்து Out of contact-இல் இருக்கிறார். உங்கள் மோசமான நிர்வாகத்தால் மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister Stalin is out of touch with the people of Tamil Nadu Annamalai