வெளிப்படையாக மிரட்டும் மத்திய அரசு - முதல்வர் ஸ்டாலின் கொந்தளிப்பு!
CM MK Stalin condemn Central Government
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையை நிராகரித்ததற்காக, வெளிப்படையாக மத்திய அரசு மிரட்டுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்திற்கு எதிரான பா.ஜ.க. அரசின் அநியாய நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை மறுத்த தமிழகத்தை மிரட்டும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடியை இரத்து செய்து, அந்த நிதியை பிற மாநிலங்களுக்கு மாற்றியுள்ளனர். இது, மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராடியதை தண்டிக்கும் செயல் என அவர் குற்றம்சாட்டினார்.
இந்திய அரசியல் வரலாற்றில், எந்த அரசாங்கமும் ஒரு மாநிலத்திற்கு எதிராக கல்வி மேம்பாட்டை குறைக்கும் அளவிற்கு இவ்வளவு இரக்கமற்ற நடவடிக்கை மேற்கொண்டதில்லை. தமிழ்நாடு மற்றும் அதன் மக்களுக்கான அநீதி, பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை மீண்டும் வெளிக்கொணர்கிறது என முதலமைச்சர் தெரிவித்தார்.
English Summary
CM MK Stalin condemn Central Government