எதிர்த்து கேள்விகேட்ட இளைஞர்..அடித்து உதைத்த திண்டுக்கல் லியோனி!! - Seithipunal
Seithipunal


மக்களைவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,தேர்தல் பிரச்சாரம் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில்,பட்டிமன்ற பேச்சாளரும் திமுக பேச்சாளருமாகிய திண்டுக்கல் ஐ.லியோனி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளளார். நேற்றுமாலை இறுதி பிரச்சாரமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தார்.

அப்பொழுது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கூட்டத்தை பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு, கூட்டத்திற்குள் நுழைந்து பிரச்சாரவாகனத்தில் வாக்குசேகரித்துகொண்டிருந்த திண்டுக்கல் ஐ.லியோனியை பார்த்து அந்த இளைஞர் கேள்விகளை எழுப்ப தொடங்கினார்.அந்த இளைஞர் கேட்டகேள்விக்கு திண்டுக்கல் லியோனி "சரி அப்புறம் பேசிக்கலாம்" என்று மழுப்பினார் .

தொடர்ந்து அந்த இளைஞர் கேள்விகளை கேட்டுக்கொண்டிருப்பதை பார்த்து ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் நிர்வாகிகள் அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கடுமையாக தாக்கியது மட்டுமல்லாமல்,அந்த அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

சம்பவத்தை அறிந்தது அங்கு வந்த தேவகோட்டை போலீசார் அந்த இளைஞர் மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் இந்து முன்னணி என்று தெரியவருகிறது .இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பலரும் அந்த இளைஞர்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Leoni who questioned the youth..


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->