வெட்டுவேன், கொலை செய்யுவேன்., ரௌடியிசம் - திமுகவினரின் மிரட்டலை கேட்பாரா ஸ்டாலின்?! - பாஜக தரப்பு! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடந்த திறந்தவெளி மாநாட்டில் பேசிய திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர் பாலு, ''ராமர் பாலம் என்பது ஒரு கட்டுக்கதை. சேது சமுத்திர திட்டத்தை தடுத்து நிறுத்தவே இதுபோன்று கட்டுக்கதைகளை பேசி வருகின்றனர். 

இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்கள் எல்லோரும் பாவிகள். யாராவது உங்களை சீண்டினால் உங்களால் திருப்பி அடிக்க முடியாது, ஆனால் என்னால் முடியும். 

ஏனென்றால் உங்களுக்கு பலம் கிடையாது, ஆனால் எனக்கு பலம் உண்டு, அதனால் நான் திருப்பி அடிப்பேன். என் கட்சித் தலைவரை சீண்டினாலோ, எவனாவது ஒருவன் அய்யா வீரமணி மீது கை வைத்தாலோ அவன் கையை வெட்டுவேன். 

இதுதான் என்னுடைய தர்மம். அவன் கையை வெட்டுவது எனது நியாயம். நியாயம் இல்லை என நீங்கள் சொல்லலாம். அதை நீதிமன்றத்திற்கு போய் சொல்லுங்கள். ஆனால் அதற்கு முன்பு அவன் கையை வெட்டி விடுவேன்" என்று பேசியுள்ளார். டி.ஆர் பாலு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜகவின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கையை வெட்டுவேன் என்கிறார் தி மு கவை சேர்ந்த ஒருவர். ஆளுநரை கொலை செய்வோம் என்றும்,  சட்டசபையில் கொலை செய்தாலும் வழக்கு கிடையாது என்கிறார் திமுக தலைமை நிலையை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.

தற்போது கையை வெட்டுவேன் என்கிறார் டி .ஆர்.பாலு. கொலை, வெட்டு, குத்து, கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிசம், ஆள் கடத்தல் என திமுகவின் அமைச்சர்கள், எம் பி க்கள், எம்.எல்.ஏ.,கள் போட்டி போட்டு குரல் கொடுப்பது வெட்கக்கேடானது.  

முதலமைச்சரின் செவிகள் அடைக்கப்பட்டுள்ளதா? கண்களை மூடி அமைதி காக்கும் மர்மம் என்ன? என்று அதில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP balu speech issue BJP Condemn


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->