பட்டொளி வீசி பாமக கொடி பறக்குதா..., பாட்டாளிகளுக்கு முக்கிய செய்தி சொன்ன மருத்துவர் இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


ஓர் இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறந்தால் அங்கு பா.ம.க.வின் கிளை இருக்கிறது என்று மட்டும் பொருள் அல்ல. மாறாக, அங்குள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.... இல்லாவிட்டால் அவர்களுக்காக கடுமையான போராட்டங்களை  முன்னெடுத்து மக்களுக்குத் தேவையான உரிமைகளை வென்றெடுக்க ஒரு ஜனநாயக போராளி அமைப்பு இருக்கிறது என்பது தான் நமது கொடிகள் அரசு நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சொல்லும் செய்தியாகும் என்று, என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். 

அவரின் அந்த பதிவில், 

"என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...!

வாழ்க்கையின் தத்துவங்களை சுருங்கச் சொல்லி விளங்க வைத்தவர் திருவள்ளுவர். அவரையும் விட வாழ்க்கை நெறிகளை சுருக்கமாகச் சொன்னவர் அவ்வையார். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் போன்றவை அதற்கு எடுத்துக்காட்டு. 

அவ்வையாரின் மற்றொரு படைப்பு நல்வழி நாற்பது.  அதில் இடம்பெற்றுள்ள முக்கியப் பாடல்:

‘நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.’’ 

‘‘திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பிறப்பு இல்லாத உடம்பு பாழ். மனைவி இல்லாத மனை பாழ்’’ என்பது தான் இந்த பாடலின் பொருள்.

இந்தப் பாடலில் நான் சேர்க்க விரும்பும் இன்னொரு வரி...
‘‘ஊரின் நுழைவாயிலிலும், ஊருக்குள்ளும் கொடி ஏற்றப்படாத கட்சி அமைப்பு பாழ்’’ என்பது தான்.

தமிழ்நாடு கிராமங்களால் நிறைந்தது. ஓர் ஊருக்குள் நுழையும் போது அந்த ஊரின் பெயர்ப்பலகை  இருக்கிறதோ, இல்லையோ.... ஊர் எல்லையின் இருபுறங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் மூவண்ணக் கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். அது அந்த ஊருக்கு அடையாளமாகவும், பெருமையாகவும் இருக்க வேண்டும். அது தான் எனது விருப்பம்.

நகரமாக இருந்தாலும், பேரூராக இருந்தாலும் ஒவ்வொரு வட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறக்க வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறக்காத வட்டமோ, ஊரோ, தெருவோ இருக்கக்கூடாது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களாக இருந்தாலும்,  பொது இடங்களாக இருந்தாலும், சந்தைகளாக இருந்தாலும் அங்கு பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி கம்பீரமாக பறக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் கொடிக்கம்பங்கள் ஆண்டு தோறும் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாவில்  வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட வேண்டும்; புதிய கொடி பறக்கவிடப்பட வேண்டும்.

ஓர் இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பறந்தால் அங்கு பா.ம.க.வின் கிளை இருக்கிறது என்று மட்டும் பொருள் அல்ல. மாறாக, அங்குள்ள மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.... இல்லாவிட்டால் அவர்களுக்காக கடுமையான போராட்டங்களை  முன்னெடுத்து மக்களுக்குத் தேவையான உரிமைகளை வென்றெடுக்க ஒரு ஜனநாயக போராளி அமைப்பு இருக்கிறது என்பது தான் நமது கொடிகள் அரசு நிர்வாகத்திற்கும், அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சொல்லும் செய்தியாகும்.

இப்போது சொல்லுங்கள் பாட்டாளி சொந்தங்களே....

பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைப்பது நமக்கெல்லாம் பெருமை தானே?
கிராமங்களில் தொடங்கி நகரங்கள் வரை அனைத்து நிலைகளிலும் அனைத்து தெருக்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி கொடி பட்டொளி வீசி பறக்க வேண்டும். அப்போது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள்  தங்களின் அடிப்படைப்பணியை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் என்று பொருள்.

இதை உணர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் பாமக கொடி பட்டொளி வீசி பறப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக முன்னேற்ற சங்கத்தின் சொந்தங்களை அணுகினால் அவர்கள் தரமான பாட்டாளி மக்கள் கட்சிக் கொடியை உங்களுக்கு வழங்குவார்கள்.

இனி எங்கும் உயரட்டும்.... பறக்கட்டும்... பாட்டாளிகளின் கொடி!" 

இவ்வாறு அந்த முகநூல் பதிவில் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Ramadoss say about PMK Flag


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->