முதல்வரை பாராட்ட மனமில்லை எடப்பாடி பழனிச்சாமி புலம்பி வருகிறார் - மேயர் பிரியா! - Seithipunal
Seithipunal


முதலமைச்சரை பாராட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மனம் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் உணவின் தரம் குறித்தும் உணவகங்களில் செயல்பாடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ. 21 கொடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது, அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா  நடத்த முயற்சி செய்துவிட்டு தற்போது முதலமைச்சர் முதலை கண்ணீர் வடிக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் சென்னையில் 407 உணவகங்கள் திறக்கப்பட்டது. அதில் 19 அம்மா உணவகங்களை எதற்காக ஸ்டாலின் மூடினார் என்ற கேள்வி எழுப்பி இருந்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்துக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்படும் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த  முதலமைச்சரை பாராட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு மனமில்லை.

திமுகவில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கிய திட்டத்தை மக்கள் அறிவார்கள். பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புலம்பி தவிக்கிறார் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami is lamenting that he does not want to praise the Chief Minister Mayor Priya


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->