#BREAKING : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எந்தெந்த கட்சிக்கு என்னென்ன சின்னம் ஒதுக்கீடு.? - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா கடந்த டிசம்பர் 4ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7ம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 8ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 83 பேரில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாதக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றப்பட்டது. 

தற்பொழுது காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று 8 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். அதன்படி, அமமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அலுவலர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம்.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கை சின்னம்.

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்க்கு முரசு சின்னம்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவுக்கு விவசாயி சின்னம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Erode by election partys candidate symbol


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->