மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை கலைக்க விரும்பினார்! - ஜே.பி நட்டா! - Seithipunal
Seithipunal


பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, சிர்மௌர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் கலந்து கொண்டு பேசினார் .

பேரணியில் அவர் பேசியபோது, மகாத்மா காந்தி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று விரும்பியதாக கூறியுள்ளார்.

அவர் இதை விளக்கியபோது, காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தின் ஒரு முக்கிய படியாக இருந்ததால், சுதந்திரம் கிடைத்தவுடன் அதன் பணி முடிவடைந்ததாகக் கருதினார் என்றார். 

அதிகாரத்தைப் பிடிக்க வேண்டிய அவசரத்தால், காங்கிரஸ் கட்சி இடது பக்கத்திலிருந்து வலது பக்கம், வலது பக்கத்திலிருந்து இடமாக நகர்ந்து கொண்டே வந்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், ராகுல் காந்தி, நகர்ப்புற நக்சல் ஆதரவாளர்களின் மொழியில் பேசுவதாகவும், நாட்டை பிளவுபடுத்தும் நோக்கத்தில் செயல்படுவதாக நட்டா சாடினார்.

காங்கிரஸ் கட்சி 1885-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gandhi wanted to dissolve the Congress party after independence JP Natta


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->