ராகுல் காந்தி மீது வெறுப்புச் பேச்சு!...பாஜகவினரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் - கார்கே அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் காந்தியை தரக்குறைவாகப் பேசிய பா.ஜ.க. தலைவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டதாக தெரிவித்தார்.

மேலும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் நச்சு மனப்பான்மைக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று கூறிய அவர், பாஜக தலைவர்களுக்கு  மோடி பயப்படுவதாக குற்றம் சாட்டினார்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள்  எங்கள் தலைவர்களின் நாக்கை அறுப்பதாகப் பேசுவதாக தெரிவித்த அவர், உண்மையைப் பேசியதற்காக ராகுல் காந்தி மீது தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் அவர் மீது வெறுப்புச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.

காங்கிரசை  பயமுறுத்துபவர்கள் சுதந்திரப் போராட்டத்தின் போது வீட்டில் அமர்ந்து இருந்தார்கள் என்றும், உங்கள் பங்களிப்பு என்ன என்பதை மக்களுக்குச் சொல்லுங்கள் என்று விமர்சித்து பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hate speech on Rahul Gandhi Protest will be held against bjp kharge notice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->