மாமூல் கேட்டு அராஜகம்., அதிமுக பெண் நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


வளையல் கடை நடத்தி வரும் பெண்ணிடம் மாமுல் கேட்டு அராஜகம் செய்த அதிமுக பெண் நிர்வாகியை   காஞ்சிபுரம் காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் சித்திரா என்பவர் வளையல் கடை நடத்தி வந்துள்ளார் கணவனால் கைவிடப்பட்ட அந்த பெண் அந்த கடை வருமானத்தில் தனது வாழ்வாதாரத்தை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக மகளிர் அணியின் காஞ்சிபுரம் நகர இணைச் செயலாளர் திலகவதி 50,000 ரூபாய் சித்ராவிடம் கேட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த திலகவதி சித்ராவை சாலைகளில் தள்ளி சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திலகவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanjipuram admk thilakavathi arrest


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->