நடிகைகளை சுத்துப்போட்டு பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள் - மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு! - Seithipunal
Seithipunal


கேரளா : கடந்த 2 தினங்களுக்கு முன் கோழிக்கோடு வணிக வளாகத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் 2 நடிகைகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வெளியே வந்த போது நடிகைகளை ரசிகர்கள் செல்பி எடுக்க முயன்றனர். அதில் சிலர் நடிகைகளின் உடலில் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட ஒரு நடிகை "தன்னிடமும், தனது சக நடிகை ஒருவரிடமும் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டபோது, எங்களால் எதுவும் செய்யமுடியாத நிலை. ஆனால், சக நடிகை மட்டும் தனது எதிர்ப்பை காட்டினார்" என்று சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்திற்கு கேரள மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு கேரள மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala cine actress abuse case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->