#BREAKING || முரசொலி - மூலபத்திரம் : மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பஞ்சமி நிலம் குறித்த அவதூறு வழக்கில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முரசொலி அலுவலக இடம் குறித்து அவதூறு பேசியதாக திமுக எம்.பி. ஆர் .எஸ்.பாரதி தொடர்ந்த அவதூறு வழக்கில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேடை ஒன்றில் பேசிய எல் முருகன், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்றும்m அதற்கான மூலப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.

இது முரசொலி இடம் குறித்து அவதூறுப் பிரச்சாரம் என்று திமுகவின் ஆர் எஸ் பாரதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

இது சம்பந்தமான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MROSOLI LAND ISSUE MINISTER L MURUHAN CASE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->