எடப்பாடி அருகே பரபரப்பு - காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - 6 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தில் உள்ள, எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி கிராமம் சின்னதாண்டவனூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை மகன் தனுஷ் கண்டன். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த அவர் அதே கம்பெனியில் பணிபுரிந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த சின்னம்பள்ளி கிராமத்தை சேர்ந்த குமாரின் மகள் ரோஷினி என்பவருக்கும் தனுஷ் கண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் காதலர்களான இவர்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் எடப்பாடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த அவர்களை விசாரித்த போலீசார், அவர்கள் இருவரும் திருமண வயதை எட்டியிருந்ததால், ரோஷினியை அவரது காதல் கணவர் தனுஷ் கண்டனுடன் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் எடப்பாடி அடுத்த சின்னதாண்டவனூர் பகுதியில் உள்ள தனுஷ் கண்டன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை தனுஷ் கண்டன் வீட்டிற்கு சொகுசு காரில் வந்து இறங்கிய கும்பல் பட்டாக்கத்தி, அரிவாளுடன் தனுஷ் கண்டன் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த ரோஷினியை காருக்குள் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து தனுஷ் கண்டன் போலீசில் புகார் அளித்தார். 

அதன் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை, வீடு புகுந்து கடத்திச் சென்ற விவகாரம் தொடர்பாக அப்பெண்ணின் தந்தை, தாய், சகோதரரர், சகோதரி உள்பட ஆறு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six peoples arrested for kidnape women in salem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->