ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ஓமர் அப்துல்லா! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 8ம் தேதி ஒரே கட்டமாக எழுதப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, தேசிய மாநாடு கட்சி பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர். 

ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் தேசிய மாநாடு கட்சி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையே, சுயேச்சையாக வெற்றி பெற்ற நான்கு எம்எல்ஏக்கள் தேசிய மாநாட்டு கட்சிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன்மூலம் தேசிய மாநாடு கட்சியின் பலம் 46-வது உயர்ந்தது. 

இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் தனி பெரும்பான்மையுடன் தேசிய மாநாடு கட்சி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஓமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Omar Abdullah CM Jammu And Kashmir


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->