பாஜக வேட்பாளர் நின்றால் நாங்கள் வாபஸ் பெறுவோம் - ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் உறுதி..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் இன்று காலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் அணியின் சார்பாக செந்தில் முருகன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வத்திடம் பாஜக வேட்பாளர் அறிவித்தால் உங்கள் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த பன்னீர்செல்வம் "ஏற்கனவே நான் எங்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்று ஆதரவு கோரினேன்.

பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது என்று சொன்னால் எங்களின் தார்மீக ஆதரவை தருவோம் என்ற வாக்குறுதியையும் அளித்துவிட்டு வந்துள்ளேன். பாரதிய ஜனதா கட்சி தங்களின் வேட்பாளரை நிறுத்துகிறார்கள் என்ற உறுதியான அறிவிப்பு வந்தவுடன் எங்களின் வேட்பாளரை திரும்ப பெற்றுக் கொள்வோம்" என ஓ பன்னீர்செல்வம் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS says withdraw candidate if BJP contests in erode east byelection


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->