#தமிழகம் || எடப்பாடி ஆதரவாளர்களின் மண்டை உடைப்பு.. உள்ளே புகுந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ரகளை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலில், இரு நபர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

வருகின்ற 11ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு நடைபெறுமா? என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது. இன்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கின் தீர்ப்பு, வருகின்ற 11ஆம் தேதி காலை 9 மணிக்கு அறிவிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓர் பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில், இரண்டு நபர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நடந்த செயல்வீரர் கூட்டத்தில் உள்ளே புகுந்த ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ரகளை செய்துள்ளனர்.

இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இருவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும்பதட்டம் நிலவி வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops side attacked to eps side


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->