ஒப்புகொள்வீரா??? CM ஸ்டாலினை ஒரே கேள்வியில் பதறவைத்த பா.ரஞ்சித்! - Seithipunal
Seithipunal


தமிழநாட்டு இளைஞர்கள் தன்னை அப்பா என்று அழைப்பதாக, கால் கால் போட்டுகொண்டு பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதே சமயத்தில் மயிலாடுதுறையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டு இருந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித் தமிழகத்தில் தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று முதல்வரின் வீடியோவை பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், " தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. 

இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே!! 

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி" என்று தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pa Ranjith Condemn to CM Stalin DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->