சாதனை அளவை எட்டும் வகையில் வாக்கு: பிரதமர் மோடி வேண்டுகோள்.!
PM Modi vote reach record levels
நாடு முழுவதும் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது, 2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த கேட்டுக் கொள்கிறேன்.
குறிப்பாக இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு வாக்கும் ஒவ்வொரு குரலும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
PM Modi vote reach record levels