#தமிழகம் || பிரபல அரசியல் கட்சியின் நிறுவனர் அதிரடியாக கைது.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் : செவ்வாபேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (வயது 33) பஜார் தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், இவரின் கடைக்கு தமிழக மக்கள் உரிமைக் கட்சி நிறுவனர் பூமொழி, கந்தம்பட்டியை சேர்ந்த மணிவண்ணன், மற்றும் இளமாறன் வந்துள்ளனர்.

அப்போது, அசோக்குமாரிடம் நீ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்று வருகிறாய், இதுகுறித்து மிரட்டலும் விடுத்து ரூபாய் ஒரு லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

அசோக்குமார் பணம் தர மறுக்கவே, கடாயில் இருந்த 35 ஆயிரம் ரூபாயை பூமொழி அபகரித்துள்ளார். இதுகுறித்து அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், பூமொழியை அதிரடியாக கைது செய்தனர்.

ஏற்கனவே பூமொழி மீது சேலம், ஈரோடு உட்பட 20 வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police arrest poomozhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->