#BREAKING || தமிழக விவசாயிகளுக்கு இனிப்பு செய்தி: சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கரும்பு விவசாயிகளின் நலனை முன்னிட்டு, பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகளில் பொங்கலுக்கான கரும்பினை நேரடியாக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்றும், ஒரு கரும்பின் அதிகபட்ச விலை 33 ரூபாயாக இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், கொள்முதல் செய்யப்படும் பன்னீர் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் என்றும், நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PONGAL SUGAR CANE TN GOVT


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->