தமிழைக் காப்பாற்றுவதில் பிரதமருக்கே முதலிடம்!...பாஜக எல்.முருகன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.

இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி உள்ள நிலையில், திராவிடம் என்ற சொல்லை வேண்டும் என்றே கவர்னர் விழாவில் தவிர்த்து இருக்கிறார்கள் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம் தமிழ்த்தாய் வாழ்த்து-ஆளுநர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் முழுக்க முழுக்க திசை திருப்பும் செயல் என்றும், இந்தி மாதம் மத்திய அரசு துறைகளில் கொண்டாடப்படுவது வழக்கம் என்று கூறிய அவர், 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் மத்தியில் தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்த போது, இந்த விழாக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழை பாதுகாப்பதிலும், உலகளவில் எடுத்து சென்றதிலும் முதன்மையாக இருப்பது பிரதமர் நரேந்திரமோடிதான் என்றும், தமிழ்ந்து முதலமைச்சரின் குற்றச்சாட்டுகள் மலிவானது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister is first in saving tamil bjp l murugan sensational interview


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->