"கடுமையான குளிரிலும் டி-ஷர்ட் அணிவது இதனால் தான்" ராகுல் காந்தி விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடுமையான குளிரிலும் கூட டி-ஷர்ட் அணிந்து கொண்டு செல்கின்றார். இது பற்றி ராகுல் காந்தி, பேசியபோது, "நடுங்குகின்ற குளிரிலும் கூட நான் ஏன் டி-ஷர்ட் அணிகிறேன் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன.

இது பற்றி நானே விளக்கம் அளிக்க விரும்புகிறேன். வெப்பமான இடத்திலிருந்து யாத்திரையை தொடங்கினேன். ஆனால், பல மாநிலங்களைக் கடந்து தற்போது மத்திய பிரதேசத்தை நெருங்கிய போது குளிர் ஆரம்பித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன் சில ஏழை சிறுமிகளை மத்திய பிரதேசத்தில் பார்த்தேன். 

அவர்களை அரவணைத்த போது குளிரில் நடுங்குவதை கண்டேன். அப்போது ஒரு முடிவெடுத்தேன் என்னால் தாங்க முடியாமல் குளிர் என்னை வாட்டும் வரை டி-ஷர்ட் மட்டுமே அணிவது என்று முடிவெடுத்தேன். குளிரில் நடுங்கிய அந்த சிறுமிகளுக்கு ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன். 

நீங்கள் குளிரில் நடுங்கும் வரை நானும் நடுங்குவேன். நீங்கள் ஸ்வெட்டர் அணியும் போது நானும் அணிந்து கொள்வேன். நான் யாத்திரையில் டீசர்ட் அணிவதை விமர்சிக்கும் பலரும் என்னுடன் நடக்கும் விவசாயிகள் ஏழை தொழிலாளர்களின் கிழிந்த உடைகள் பற்றி விமர்சிப்பதே இல்லை. 

நான் டி-ஷர்ட் அணிவது ஒரு விஷயமே இல்லை. ஆனால், அவர்கள் கிழிந்த உடை அணிந்து கொண்டு ஸ்வெட்டர் இல்லாமல் இருக்கின்றார்களே என்ற கேள்வி ஏன் யாருக்கும் தோன்றவில்லை?" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Vanthu about his T Shirt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->