BigBreaking: செந்தில்பாலாஜிக்கு இன்று ஜாமின் இல்லை! நாள் குறித்த உச்சநீதிமன்றம்! எழுந்த சந்தேகத்தால் மீண்டும் விசாரணை! - Seithipunal
Seithipunal


முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுத்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும்செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், விசாரணை முடிந்து இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், திடீர்திருப்பமாக செந்தில் பாலாஜிக்கு எதிரான லஞ்ச வழக்குகளை அமலாக்கத் துறை சார்ந்திருக்கப் போகிறதா? இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் குற்றத்தை அமலாக்கத் துறை கைவிடப்போகிறதா? என்று விளக்கம் கேட்டு தெரிவிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த இந்த வழக்கின் விசாரணை இன்று கடைசி வழக்க விசாரணை செய்யப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்த நிலையில், வரும் 20 ஆம் தேதி காலை முதல் வழக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji Bail case Supreme Court Aug 20


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->