அதிர்ச்சி!...ரயில் பயணத்தில் நிம்மதி இல்லை!...6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து!...சு.வெங்கடேசன் பரபரப்பு பதிவு! - Seithipunal
Seithipunal


6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பாக்மதி விரைவு ரயில் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு  சென்றுகொண்டிருந்தது. தொடர்ந்து அந்த ரயில், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் வேகமாக வந்து மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில், சில பெட்டிகள் தீப்பிடித்து எரிந்த நிலையியில்,  சிக்னல் கோளாறு காரணமாக ரெயில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு விபத்தின் போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே என்று கூறியுள்ள அவர், ஆய்வின் முடிவின் மூலம் தீர்வுகளை உருவாக்குவது எப்போது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உயிர்சேதம் இல்லாத பெரும் நிம்மதி இருந்தாலும் , ஒவ்வொரு ரெயில் பயணத்தையும் நிம்மதி இல்லாத பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரெயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock no relief in train travel a train accident in 6 days s venkatesan sensational record


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->